ஆட்டோ !
அவசரம்! யாருக்குத் தான் இல்லை?
எதில் என்பதில் தான் வியாக்கியானம்.
விண்டவர் கண்டிலர்; கண்டவர் விண்டிலர் என்றெல்லாம் சொன்னால்?
தப்பிக்கப் பார்க்கிறீர்?
சில்லறை இல்லை? எரிச்சலுடன் அந்த ஆட்டோ டிரைவர்!
கூடுதலாகக் கொடுத்த பணத்திற்கு அவர் மீதி தராமல் சரெலென்று பறந்தார். பற் பல பயணங்களில் பணம் வேண்டும்!
யாருக்குத் தான் வேண்டாம்?
அதனால் தானே மீதியை எதிர்பார்த்தது! அவர் பறந்து விட்டால்?
டயர் பஞ்சர் ஆகுவதாக!
நாவில் மட்டும் வருவது பெரும்பாலும் பள்ளிவாசலில்!
தம்பி!
உங்களுக்கு இனி கண் தெரியாது!
அகக் கண்ணை சொல்லியிருந்தால் பரவாயில்லையே;
ரயிலில் சேட்டை வாலிபர் தலைவனின் கேலியின் தீவிரம் தாங்காத அந்த முதியவரின் வார்த்தைகள் அவனின் புறக் கண்களையன்றோ தாக்கி விட்டன! இனி பார்வையே இராதா?
அடடா!
ஸ்ட்ரேய்ன்ஜஸ்ட் கோ இன்ஸிடன்ட்?
கற்பனையா? அப்பாடா!
என்றாலும் அமானுஷ்ய ஆற்றலில் எனக்கு ஆவல்!
ஆம்! எனக்கு இன்னொரு பெயர் உண்டு ..... பாஷா !
உடனடி ரிசல்ட் தெரிந்தாக வேண்டும்!
கிரிக்கெட்டோ, லாட்டரியோ எதுவும் வந்தாக வேண்டும்!
கவனியுங்கள் அகக் கண் பார்வை புறக் கண்பார்வைக்கு மட்டம் என்னும் என் கருத்து ஏன் வருகிறது ? இவ்வுலகை மிக ஆழ்ந்து நேசிக்கின்றேன்? ஹராமோ ஹலாலோ பலா பலன்களை உடனழயாகக் கண்டிட வேண்டுமே! அவனவன் தப்பு செய்கிறான்! மிகப் பரவலாக நன்றாகத் தானே வாழ்கிறார்கள்? அச்சுறுத்தி எச்சரிக்கை செய்யப் பட்ட தண்டனை எங்கே?
அருள் கூர்வீர்! கண்டவர் விண்டிலர் செய்யுள் பாடாதீர்!
என் நம்பிக்கையில் அவசரம் தோய்ந்திருக்கிறது? அல்லது அவசரத்தில் நம்பிக்கை தோய்ந்திருக்கிறது? அவ நம்பிக்கை?
இறை சோதனை என்பது யாது?
காலத்தை நிறுத்தியே விடுவது போலும் ?
எப்போது காலம் நிற்கிறது? பேரம் பேசி இழுத்தடிக்கிறது?
வேதனைகளின் போது மட்டுமா? என் மன விருப்பத்திற்கு மாற்றமாக எது ஒன்று நடந்தாலும் தான்!
யா இறைவா! வாழ்க்கை ஓட்டப் பந்தய சோதனைக் களம்; முடிவு கவனிக்கப் படுகிறது. இன்னும் நம்புங்கள், நம்புங்கள் என்றே கூறி இழுத்தடித்து அதன் பலன் கண்டவர் விண்டிலர் என்ற நியதியையும் ஏற்படுத்தி விட்டால் என் போன்றோர்க்கு எவ்விதம் நம்பிக்கை உண்டாகுமாம்?
கடன் கூறாதீர்! தேவை ரொக்கம்!
காலம் ஜவ்வாகி விட்ட வேளைகளில் இவ்விதமாகவே எப்போதும் என் புலம்பல்!
அதோ! கசங்கிய உலோகக் குப்பை தான் என்ன அங்கே?
ஆட்டோ !
எதில் என்பதில் தான் வியாக்கியானம்.
விண்டவர் கண்டிலர்; கண்டவர் விண்டிலர் என்றெல்லாம் சொன்னால்?
தப்பிக்கப் பார்க்கிறீர்?
சில்லறை இல்லை? எரிச்சலுடன் அந்த ஆட்டோ டிரைவர்!
கூடுதலாகக் கொடுத்த பணத்திற்கு அவர் மீதி தராமல் சரெலென்று பறந்தார். பற் பல பயணங்களில் பணம் வேண்டும்!
யாருக்குத் தான் வேண்டாம்?
அதனால் தானே மீதியை எதிர்பார்த்தது! அவர் பறந்து விட்டால்?
டயர் பஞ்சர் ஆகுவதாக!
நாவில் மட்டும் வருவது பெரும்பாலும் பள்ளிவாசலில்!
தம்பி!
உங்களுக்கு இனி கண் தெரியாது!
அகக் கண்ணை சொல்லியிருந்தால் பரவாயில்லையே;
ரயிலில் சேட்டை வாலிபர் தலைவனின் கேலியின் தீவிரம் தாங்காத அந்த முதியவரின் வார்த்தைகள் அவனின் புறக் கண்களையன்றோ தாக்கி விட்டன! இனி பார்வையே இராதா?
அடடா!
ஸ்ட்ரேய்ன்ஜஸ்ட் கோ இன்ஸிடன்ட்?
கற்பனையா? அப்பாடா!
என்றாலும் அமானுஷ்ய ஆற்றலில் எனக்கு ஆவல்!
ஆம்! எனக்கு இன்னொரு பெயர் உண்டு ..... பாஷா !
உடனடி ரிசல்ட் தெரிந்தாக வேண்டும்!
கிரிக்கெட்டோ, லாட்டரியோ எதுவும் வந்தாக வேண்டும்!
கவனியுங்கள் அகக் கண் பார்வை புறக் கண்பார்வைக்கு மட்டம் என்னும் என் கருத்து ஏன் வருகிறது ? இவ்வுலகை மிக ஆழ்ந்து நேசிக்கின்றேன்? ஹராமோ ஹலாலோ பலா பலன்களை உடனழயாகக் கண்டிட வேண்டுமே! அவனவன் தப்பு செய்கிறான்! மிகப் பரவலாக நன்றாகத் தானே வாழ்கிறார்கள்? அச்சுறுத்தி எச்சரிக்கை செய்யப் பட்ட தண்டனை எங்கே?
அருள் கூர்வீர்! கண்டவர் விண்டிலர் செய்யுள் பாடாதீர்!
என் நம்பிக்கையில் அவசரம் தோய்ந்திருக்கிறது? அல்லது அவசரத்தில் நம்பிக்கை தோய்ந்திருக்கிறது? அவ நம்பிக்கை?
இறை சோதனை என்பது யாது?
காலத்தை நிறுத்தியே விடுவது போலும் ?
எப்போது காலம் நிற்கிறது? பேரம் பேசி இழுத்தடிக்கிறது?
வேதனைகளின் போது மட்டுமா? என் மன விருப்பத்திற்கு மாற்றமாக எது ஒன்று நடந்தாலும் தான்!
யா இறைவா! வாழ்க்கை ஓட்டப் பந்தய சோதனைக் களம்; முடிவு கவனிக்கப் படுகிறது. இன்னும் நம்புங்கள், நம்புங்கள் என்றே கூறி இழுத்தடித்து அதன் பலன் கண்டவர் விண்டிலர் என்ற நியதியையும் ஏற்படுத்தி விட்டால் என் போன்றோர்க்கு எவ்விதம் நம்பிக்கை உண்டாகுமாம்?
கடன் கூறாதீர்! தேவை ரொக்கம்!
காலம் ஜவ்வாகி விட்ட வேளைகளில் இவ்விதமாகவே எப்போதும் என் புலம்பல்!
அதோ! கசங்கிய உலோகக் குப்பை தான் என்ன அங்கே?
ஆட்டோ !