மன ஓட்டம்!

Tuesday, March 10, 2009

Goose Berry

அதிகாலையில் பழநி வந்து தோட்டத்தில் மோட்டார் காயில் தீய்ந்து போய் விட்டது என்ற செய்தி சொன்னார். அதிலிருந்தே அத்தா கடு கடு என்றிருக்கிறார். சாப்பிடுகிற நேரத்தில் தம்பி தொண தொண என்கிறார் ; நைய புடைக்கப் படுவார்! குறைந்த பட்சம் தலையில் ஒரு கொட்டு கிட்டும்; நெல்லிக் காய் சைஸில் புடைக்கும் என்ற வண்ணம் பெரியவர் எண்ணிக் கொண்டிருந்தார்..

அமல்! செயல்!அமல் செய்!
செயல் படு! இதுவே என் முந்நாள் முழக்கம்!

'' படுக்கையில் இருந்து தவ்வி துள்ளி எழுந்திரு, தூக்கம் இக்கணமே பறக்க வேண்டும்! ஜேம்ஸ்பாண்ட் அப்படித்தான் எழுந்திருப்பார்! கண்களைக் கசக்கிக் கொண்டு, சோம்பலாக தொள தொள என்றெல்லாமா இருப்பார்கள்? கூடாது! மிடுக்கு, தேவை ராணுவ விறைப்பு!. '' மிரளும் ஆட்டுக் குட்டியாக இருந்த என் மூத்த மகன் குளிர்ந்த நீரில் ஒளுச் செய்து அதிகாலை தொழுகைக்கு ஓடியாக வேண்டும். தொழுத பின்னர் தொடரும் நஃப்ஸைக் காய்ச்சி எடுக்கும் திக்ரு சபையில் உட்கார்ந்தாக வேண்டும். இப்படியாக வளர்க்கப் பட்டவர் பழநியின் நல்வாக்கு கேட்டபின் தம்பியின் தலையை கொஞ்ச நேரம் கழித்து வாஞ்சையாக தானே தடவிக் கொடுக்கவும் எண்ணம் கொண்டார் போலும்!

'' ஒரே ஒரு தரம் முறைத்ததோடு சரி. அத்தா விட்டு விட்டார் .என்ன ஆனது? அக்காவையும் என்னையும் ஆணம் காய்ச்சி விட்டு ஒன்பது ஆண்டு இளைய தம்பியை இவ்விதம் வளர்த்தால்.. ... பாரேன்! காலை படுக்கையில் இருந்து எழச் செய்ய - தூக்கத்தை விட தொழுகை மேலானது - என்ற மெல்லிய குரல் வாசகம் மட்டும் தானா? " இது பெரியவர் தன் அம்மாவிடம்!

அதற்கு அந்த அம்மாள் '' என்ன செய்வது! ஸீன் கானரிக்கு வயதாகி விட்டது! மகனே! கேள்! மனிதர் Impulsive ஆக இருக்கக் கூடாது; always more ready for action than to reason என்றா இருப்பது ! மலக்குகளை விட மனிதன் சிறந்தவன்; அவனுக்கு இஹ்த்தியார் கொடுக்கப் பட்டு இருக்கிறது. He should always exercise and choose the right choice. Impulsive ஆக - பழக்க தோஷத்தால் நல்லமல் செய்வதில் சிறப்பில்லை. Blazing Magnum த்துடன் உலா வந்தால்.. ? அப்புறமென்ன?.. வாயில் இரத்தத்துடன் வந்த கீரியின் மீது தண்ணீர் குடத்தைப் போட்டு அதன் பிராணன் போன பிறகு உண்மை அறியும் அபலை! '' என்றெல்லாம் இப்போது முழங்குகிறார். நெற்றிக்கண் ?

என்ன செய்யலாம்.. புரிகிறது! உன் ஆதங்கம் அவரின் உபதேசத்தைப் பற்றி அல்ல மாறாக அடக்கு முறை உத்தி பிரயோகம் தானே? அந் நாளில் அடக்கப் பட்டு பறிக்கப் பட்டு விட்ட உன் சுதந்திரத்திற்கு என்ன பரிகாரம்? யோசிப்போம் '' என்பதாக சமாதானம் செய்தது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home