மன ஓட்டம்!

Tuesday, October 16, 2007

தொப்பி! அது தான் முக்கியம்.

ஒரு புத்தகத்தில் இதைப் பார்த்தேன்.

'ஒரு பரிசோதனையில் முன் பின் அறிமுகமில்லாத இரண்டு ஆட்கள் பங்கேற்பார்கள். அதில் ஒருவரிடம் நு}று டாலர் தரப்படும். அவர் மற்றவருடன் அந்தக் காசை எப்படியும் பங்கு போட்டுக் கொள்ளலாம். அவர் கொடுக்கும் பங்கை இரண்டாமவர் ஏற்றுக் கொண்டால் இரண்டு பேருமே அந்தப் பணத்தை வைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த வாய்ப்பு ஒரு முறையே. மற்றவர் அந்தப் பணத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இருவருக்குமே பணம் கிடையாது.

இந்தப் பரிசோதனையில் அநேகம் பேர் சரிபாதியாக 50 டாலர் 50 டாலர் என்று பங்கு போட்டுக் கொள்வார்கள். இன்னும் சிலர் 60, 40 என்று பிரித்துக் கொள்வதுமுண்டு. ஆனால் 70, 30 என்று பிரிக்கும் போது அநேகமாக இரண்டாவது ஆள் தன் பங்கை ஏற்றுக் கொள்ள மாட்டார். அப்போது இருவருக்குமே பணம் கிடைக்காமல் போய்விடும்.

இதில் ஒரு கேள்வி இருந்தது. விஞ்ஞானிகள் இரண்டாவது ஆளைக் கேட்டார்கள். ' உமக்கு கிடைப்பது 30 டாலர்; அதுவும் இலவசம். அதை ஏன் நிராகரித்தீர்?' அதற்கு அவர் சொல்லும் பதில் ஒரே மாதிரி இருக்கும்.

'அது எப்படி, அவர் 70 டாலரை தனக்கு வைத்துக் கொள்ளலாம்? '
'ஆனால் சும்மா வந்த 30 டாலரை இழந்து விட்டீரே! '
'அது பரவாயில்லை. அவருக்கு 70 டாலர் கிடைக்கக் கூடாது. '

அந்த விஞ்ஞானிகள் மனித உள்ளத்தின் ஆழமான ஒரு நுட்பத்தைத் தொட்டு விட்டார்கள். ஆதி காலத்தில் இருந்தே மனிதனுக்கு சமத்துவத்தில் நாட்டமிருக்கிறது. தன் பங்கு அவனுக்குப் பெரிதில்லை. அடுத்தவனுக்கு அநியாயமாக அதிகம் கிடைக்கக் கூடாது. அது தான் முக்கியம்."
------------
ஆமாம்! ஆமாம்! அது தான் முக்கியம்!
பிறகு கேள்வி பதிலாக மனம் பேசியது.
இன்னின்னானுக்கு அது எனக்கு ஏன் இது?

எதைக் கொண்டு வந்தாய்? அவன் கப10ர், ரஹீம் அதே சமயம் ஜப்பார், கஹ்ஹார். எல்லாம் அவனுடையது! நிணைப்பதை நடத்துவான்! அவனைக் கேள்வி கேட்க முடியாது!

சரி! ஏவலை ஏற்கிறேன், விலக்கலைத் தள்ளுகிறேன். இன்னான் இப்படி இல்லை ஆயினும் அவனுக்கு மட்டும் ஏன் அது? அநியாயம்!

வாழ்க்கை ஒரு சோதனை; அவன் கருணையுள்ள சர்வதிகாரி என்ற அடிப்படையை மனதில் நிர்ணயம் கொள்ளாமல்... தொப்பி!

3 Comments:

  • At 8:05 PM , Blogger Moosa Khan said...

    I did not understand the usage of the word 'thoppi' here. I enjoyed reading this

     
  • At 9:04 AM , Blogger rameez4l said...

    i ditto moosa khan.
    naan moosa khan-i vazhimozhigiraen

    - rameez bilali

     
  • At 5:07 AM , Blogger M.Abdul Khadar said...

    ஆமாத்தா! தொப்பி தான்தா முக்கியம். மனசில ஈமான் தானத்தா முக்கியம். அத விட்டுப் போட்டு...

     

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home