மன ஓட்டம்!

Friday, August 17, 2012

பந்தயம் முடியவில்லை!

சில ஆண்டுகளுக்கு முன்..... வெற்றிகரமான தன்னுடைய தொழில் சாம்ராஜ்ய ரகசியம் என்னவென்று இந்த  தொழிலதிபர் கூறுவதைக் கேட்கிறாயா  என்று  நண்பரிடம் சொன்னேன்.

அவரது கவனத்தை பெருமளவில் ஈர்க்கும் என்று  விஷயத்தை சொல்லவும், புகைத்துக் கொண்டிருந்த அவர் வானை நோக்கி புகையை ஊதினார்... கால் வாசி தான் கரைந்திருந்த சிகரெட்டை கீழே போட்டு சவட்டினார்..... உயிர் தலத்தில் ஓங்கி ஓங்கி  உதைபட்ட போதும் (repeated kicks in the crotch) கொட்டாவி விடும் Mr.Bean Reborn ஆக அவர் என்னை பரிதாபமாகப் பார்த்தார் . சலிப்புடன் சொன்னார்  "அத்தா.. அவனவன் பொருளாதாரத்தில் வெற்றி பெற்றால் ஏதாவது சொல்லுகிறான்.. பத்திரிக்கைகாரன் அதை பிரசுரித்து சம்பாரிக்கிறான்... உன்னைப் போன்றவன்  அதனை மனனம் செய்கிறான்..அது ஒன்றும்  வேதவாக்கு இல்லை... அப்படியானால் நீர் குறிப்பிடும்  இந்த நபர் Forbes list ல்  இல்லையே?...." கலவரமடைந்தேன்.

பொருளாதாரமும், தர்க்கமும் கலந்த கல்லைக் கட்டி இழுத்து எந்த மடாலயத்தில் பயின்றார் இவர்! போகட்டும்  என்று விட்டு விட்டேன்.

பொதி அதிகம், விமானக் கட்டணம் எகிறும் என்று மகன் விட்டு விட்டு சென்ற புத்தகங்களில் ஒன்றை தற்போது எடுத்து வாசித்தேன். Fooled by Randomness - The Hidden Role of Chance in Life and in the Markets - Nassim Nicholas Taleb என்பாரின் புத்தகம்.

முதல் அத்தியாயத்தில் ஹிகாயத்  ஒன்று சொல்லி ஆரம்பிக்கப்படும்.... ஞானி  சொலோன், க்ரோசீயஸின்  அரண்மனைக்கு  வருவிக்கபடுவார். தன்  செல்வப் பெருக்கு அவரை மிரட்டும், நீ தான் உலகிலேயே மிக மகிழ்ச்சி ஆனவன் என்று சான்று கொடுத்து விட்டு போவார்  என்று மன்னன் இறுமாப்புடன் இருக்க அவர் போட்ட பட்டியலில் வீர மரணம் தழுவிய ஓரிரு அரசர்கள் மட்டுமே!

அடுத்தடுத்த பக்கங்களில் நகைக்கச் செய்யும் வாக்குச் சாதுரியமான பதங்களில் தன் கருத்துக்களை தரவுகளுடன் வரைந்திருக்கிறார். மீண்டும் கலவரமடைந்தேன்... சில ஆண்டுகளுக்கு முன் வானில் புகை விட்ட நண்பரின் அதே கருத்துகளை தகுந்த முகாந்திரத்துடன் கூறி வான் புகையை என் முகத்தில் ஊதி விட்டிருக்கிறார். போகட்டும். ( B School களில்  Ph.D கள் கைப்பற்றிய வில்லாளன்.)

சொலோனின் மகிழ்ச்சி பேர்வழிகள் பட்டியலில் தான் இல்லையே;  இறந்தவர்களின் பெயர்கள் மட்டுமேவா.. ஏன் என வினவ .... பெரியவர் சொன்னதாக நீண்ட இலக்கிய நய வசனங்கள்.... அதைக்  கொச்சையாக சுருக்கி ... "it ain't over until the fat lady sings" ஸாம்.

எல்லாம் நேரம்!.... சைரஸ் மன்னனால் க்ரோசீயஸ்  சிறை பிடிக்கப்பட்டு... உயிருடன் எரியூட்டப் பட.

சொலோன்! நீர் சரியாகவே சொன்னீர் என்று ஓலமிடுகிறான். (என்ன புலம்பல்  என்று கேட்டு அறிந்த சைரஸ்...ஆம்! பந்தயம் இன்னும் முடியவில்லை.. எனக்கு தான்  என்று விடுதலை செய்து விடுகிறான்.)