அந்துக்காயும் ஆனப்பரம்பில் மதியூகியும்!
தன்னுடைய வேறொரு பால்ய நண்பரிடத்து நடைமுறை சாத்தியம் மற்றும் சமன்பாட்டுக் கணிதம் கலந்த கொழுக்கட்டையை படைத்ததுடன் நில்லாது யோசிடா! டேய்! யோசிக்க சள்ளை படாதே! என்று பட்டவர்த்தனமாக மிளகாய்ப் பொடியை தூவினார் ஆனப்பரம்பில்.
நீ சொன்னதில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது என்று நான் சொல்லி கூடுதல் காரத்தை சேர்த்தேன். உபாயம் பலித்தது; நழுவினேன்!
ஒருமுறை கேரளாவில் உறவினர் வீட்டு திருமணம். முன்னதாகவே தன் செவ்வந்தி பூ நிற Ford Fiesta வில் வந்து விட்டிருந்த ஆனப்பரம்பில் என்னை "இவிடே வரூ" என்று அழைத்து ஒரு கசெரையில் இருக்க வைத்தார்.
ஒரு கண்ணுக்கு வெண்ணையும் மறு கண்ணுக்கு சுண்ணாம்பும் என்ற கணக்கில் என்னுடன் வந்த காரம் படைக்கப்பட்ட நண்பரை தன் ஆள்காட்டி விரல் சுட்டி "இத் தேஹ்ம் நின்களுடே பந்துவான்னு? எப்பலாம் இவ்டே எத்தி ? " என்று இரட்டுற மொழிந்தார்.
அதற்கு காரம், இப்போதுதான் எத்த போகிறது; எத்தி முதுகில் சவட்டி கழியும்! கூனல் குருக்கன் ஆவாய், உன் கூவல் குட்டிகானம் கடந்து பாளையத்தை எட்டும்! என்று மறுமொழி பகர்ந்தார்.. காதில் புகை வந்து கொண்டிருந்தது.
அதை சற்றும் பொருட்படுத்தாமல் நீ " Balanced " ஆக இருப்பியா? " Focused " ஆக இருப்பியா? நீண்ட நெடிய லெக்சர்.. எப்படியும் " Cynic " ஆக இருக்க கூடாது; "Analyze " பண்ணும், ஒய்! கால் மேல் கால் போட்டு கொண்ட மதியூகி என்னிடம். இதில் எது உன் பாணி?
இவருக்கென்ன? என் பாணி எதுவானால் என்ன? அக்கறை ஒரு அளவு தான்! கொண்டோடியில் மலைப்பாதையில் தலைசுற்றில் அலைக்கழிக்கப்பட்டு ஒரு வழியாக வந்து சேர்ந்தால்..
என் விதியே! சுய பச்சாதாபத்தில் கண்களில் நீர்..
என் மலையாள ஞானம் : இவிடே வரூ - இங்கே வா-அன்புடன் அழைக்கும் சொல், பந்து - சொந்தம், குருக்கன் - நரி, கூவல் - ஊளையிடல், சவட்டி - மிதித்து, கசெரை - நாற்காலி, Kondody Motors - குமுளி-கோட்டயம் வழியில் முரட்டுத்தனமாக இயக்கப்படும் பஸ் கம்பெனி.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home